tamilnadu

img

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 29 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 29-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள மசூதியில் இன்று தொழுகை நடந்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 29க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.