tamilnadu

img

முதல் பக்க செய்திகளை கருப்பு மையால் மறைத்து எதிர்ப்பை பதிவு செய்த பத்திரிகைகள்!

ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து முதல் பக்க செய்திகளை கருப்பு மையால் மறைத்து, தங்கள் எதிர்ப்பை ஆஸ்திரேலியா பத்திரிகைகள் பதிவு செய்துள்ளன.

ஆஸ்திரேலியாவில், கடந்த ஜூன் மாதத்தில் போர் குற்றங்கள் தொடர்பாக ஒரு கட்டுரை வெளிவந்த நிலையில், ஆஸ்திரேலியன் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (ஏபிசி) வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதே போல், நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியாவின் கட்டுரையில் ஒன்றில் ஆஸ்திரேலிய நாட்டு மக்களை உளவு பார்க்க அரசு முகமை ஒன்று முயல்வதாக குற்றம்சாட்டப்பட்டது. இதை அடுத்து நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா முகமையை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. இது ஊடகங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை எழுப்பின. இதை தொடர்ந்து, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சட்டம், பத்திரிக்கைகளின் செய்தி சேகரிப்பு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், அரசு ரகசிய கலாசாரம் ஒன்றை உண்டாக்க முயல்வதாகவும், அந்நாட்டு பத்திரிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று காலை வெளிவந்த நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா, நைன் மாஸ்ட்ஹெட்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில், செய்திகளை கருப்பு மையால் மறைத்து அதற்கு மேலே சிவப்பு நிறத்தில் 'ரகசியம்' என்ற முத்திரையுடன் வெளிவந்துள்ளன.