tamilnadu

img

ஆஸ்திரேலியாவில் வறட்சி - 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளையடித்த மர்ம நபர்கள்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வறட்சியினால், மக்கள் தண்ணீருக்காக அலைபாய்ந்து வரும் நிலையில், 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு வெயிலும், வறட்சியும் நிலவுகிறது. இதற்கிடையில், ஆஸ்திரேலிய காடுகளில் காட்டுத் தீ ஆங்காங்கே பற்றி எரிந்து வருகிறது. இதனால், மக்கள் திணறுகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள இவான்ஸ் நகரில், விவசாயி ஒருவரின் பண்ணையில் தன்னுடைய பயன்பாட்டுக்கும், விவசாயத்துக்கும் தண்ணீரைச் சேமித்து வைத்திருந்ததாகவும், அந்த 3 லட்சம் லிட்டர் தண்ணீர் (80 ஆயிரம் கேலன்) மர்ம நபர்கள் கொள்ளையடித்தகாவும் ஆஸ்திரேலியா நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, முர்விலும்பாவ் எனும் சிறிய நகரில் ஏறக்குறைய 25 ஆயிரம் லிட்டர்(6600 கேலன்) தண்ணீர் 6 முதல் 7 டேங்கரில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதுவும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.