tamilnadu

img

இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு

இலங்கையில்  அவசர நிலை யை நீட்டித்து ஜனாதிபதி சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21–ந்தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 250–க்கும் மேற் பட்டோர் பலியானார்கள்.   இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அவசர நிலை பிர கடனம் செய்யப்பட்டது. அந்த அறி விப்பு இன்றோடு முடிவுக்கு வருவ தாக இருந்தது. இலங்கையில் பாதுகாப்பு நிலவரம் 99 சதவீதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளதாகவும்  இலங்கை ஜனாதி பதி சிறிசேனா தெரிவித்து இருந் தார்.   மேலும், மே மாத இறுதியில் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடு களின் தூதர்களை சந்தித்த இலங்கை அதிபர் சிறிசேனா ஜூன் 22 ஆம் தேதிக்கு பிறகு அவசர நிலை கெடு பிடிகள் தளர்த்த நடவடிக்கை எடுக் கப்படும் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், சிறிசேனா, அவசர நிலையை நீட்டித்து உத்த ரவு பிறப்பித்துள்ளார். குண்டு வெடிப்பு குறித்து முன்பே எச்ச ரிக்கை விடுக்கப்பட்டும் அலட்சி யாக செயல்பட்ட ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலருக்கு எதி ராக கிரிமினல் விசாரணை நடத்தப் பட்டு வருவதால், அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. அவசர நிலையை ஒரு மாதம் வரை நீட்டிக்க முடியும் என்று கூறி யுள்ள இலங்கை அதிகாரிகள், நாடாளுமன்றத்தில் 10 நாட்களுக் குள் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.