tamilnadu

img

தில்லி அருகே குருகிராமில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு

தில்லிக்கு அருகே உள்ள குருகிராமில் லட்சக்கணக்கான பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.

கடந்த சில மாதங்களாக, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில், பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்தன. இதில் பல லட்சம் பரப்பளவில் பயிர் நிலங்கள் சேதமடைந்தன. இந்த நிலையில், தில்லிக்கு அருகே உள்ள அரியாணா மாநிலத்தை சேர்ந்த குருகிராமில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. குருகிராமின் பாலம் விஹார் பகுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. இதனால், அப்பகுதியில் வசிப்போரும், வாகன ஓட்டிகளும் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் விடியோக்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த சூழலில், அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.