tamilnadu

img

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் தற்கொலை செய்து கொண்டார். 

மருத்துவப்படிப்பில் சேருவதற்காக மத்திய பாஜக அரசு நீட் நுழைவுத்தேர்வை கடும் எதிர்ப்புக்கு மத்தியில் திணித்தது. இதனால் மருத்துவப்படிப்பில் சேரமுடியாமல் ஏழை மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைந்துபோனது. நீட் தேர்வு கொடுக்கும் மன அழுத்தத்தால் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்கின்றன. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே எலந்தங்குழியை சேர்ந்தவர் மாணவர் விக்னேஷ் (19) . இவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதனால் மாணவர்  மன உளைச்சலுக்கு ஆளானநிலையில் இருந்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில் புதனன்று எலந்தங்குழி கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

;