உலகம் முழுவதும் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அவசர உதவிக்காக 12 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 90 ஆயிரம் கோடி ரூபாய்) உலக வங்கி ஒதுக்கியுள்ளது.
சீனாவின் உகான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ் (கொவிட்-19) கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கியது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,201 ஆக அதிகரித்துள்ளது. சீனா உட்பட உலகம் முழுவதும் 93,158 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் பலி எண்ணிக்கை 2,981 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 79 ஆகவும், ஈரானில் 77 ஆகவும், தென் கொரியாவில் 32 ஆகவும், அமெரிக்காவில் 9 ஆகவும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அவசர உதவிக்காக 12 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 90 ஆயிரம் கோடி ரூபாய்) உலக வங்கி ஒதுக்கியுள்ளது. மக்களுக்கு சுகாதார வசதிகளை விரைந்து கிடைக்கச்செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.