tamilnadu

img

பிரான்ஸிடம் மீண்டும் தஞ்சம் கேட்டார் ஸ்னோடன்

அமெரிக்காவின் வரம்பு மீறி பிற நாடுகளை கண்காணித்து வந்ததை அம்பலப்படுத்திய ஸ்னோடன் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு மீண்டும் மனு செய்துள்ளார். 

அமெரிக்கா உளவு அமைப்பான சிஐஏவில் பணியாற்றியவர் ஸ்னோடன்.   அமெரிக்கா ரகசியமாக நட்பு நாடுகளை கண்காணித்து வந்ததை உலகிற்கு அம்பலப்படுத்தினார். இதனால் அமெரிக்காவுக்கு அதன் நட்பு நாடுகளிடம் இருந்து பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டதால் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். 
தற்போது ரஷ்யாவில் அடைக்கலமாக உள்ள எட்வர்ட் ஸ்னோடென் இதற்கு முன்னர் சில ஐரோப்பிய நாடுகளிடம் தஞ்சம் கேட்டிருந்தார்.  கடந்த 2013-ம் ஆண்டில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டேவிடம் முன்னர் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து வெளியேறிய பினனர் தனது வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகளை பற்றி  எட்வர்ட் ஸ்னோடென் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் வரும் நாளை (17-ம் தேதி) 20 நாடுகளில் வெளியாகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிடம் தஞ்சம் கேட்டு அந்நாட்டின் அதிபர் எம்மானுவேல் மேக்ரானிடம் எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு செய்துள்ளார்.