அமெரிக்காவில் வீட்டில் நடைபெற்ற விருந்தின்போது ஏற்பட்ட தகராறில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிகாகோவின் சவுத் மே தெருவின் 5700 பிரிவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு கேளிக்கை விருந்து நடைபெற்றுள்ளது. விருந்தில் பங்கேற்றவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.