tamilnadu

ஜேக்கப் பிளேக் : கருப்பின இளைஞர் மீது பாய்ந்த ஏழு குண்டுகள் அமெரிக்காவில் மீண்டும் வெடித்த போராட்டம்

வாஷிங்டன், ஆக. 27- அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கருப்பினத்தை சேர்ந்த வர் ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவ ரால் ஏழு முறை சுடப்பட்ட சம்பவம் அந்த  நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஜேக்கப் பிளேக் என்ற இளைஞர் மீது காவல்துறை அதிகாரி கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். கருப்பின இளைஞர் மீது நடத்தப் பட்டுள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத் திற்கு கண்டனம் தெரிவித்து விஸ்கான் ஸின் மாகாணம் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விஸ்கான் ஸின் மாகாணத்தின் தலைமை அரசு  வழக்கறிஞர், ஜேக்கப் பிளேக் மீது  துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரியின் பெயர் ரஸ்டன் ஷெஸ்கி என்றும், அவர் கடந்த ஏழாண்டுகளாக கென்னோஷா நகர காவல்துறையில் பணியாற்றி வருவதாகவும் தெரி வித்தார்.

சம்பவத்தின் பின்னணி என்ன?
அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தை சேர்ந்த ஜேக்கப் பிளேக் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தனது தோழியை சந்திப்ப தற்காக அவரது வீட்டிற்கு சென்றுள் ளார். இதையடுத்து, அவரைச் சந்திக்க விரும்பவில்லை என்று ஜேக்கப்பின் தோழி காவல்துறையினரை அழைத்து கூறியதாக தெரிகிறது.  இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் ஜேக்கப் பை கைதுசெய்ய முயற்சித்துள்ளனர். ஒரு கட்டத்தில், அவர் மீது மின்னதிர்ச்சி மூலம் தற்காலிக பக்கவாதத்தை உண் டாக்கும் கருவியை பயன்படுத்தியுள்ள னர். அதன் பிறகு, காவல்துறை அதிகாரி களை கடந்து தனது காரின் கதவை திறந்த ஜேக்கப்பின் பின்புறத்தில் ரஸ் டன் ஷெஸ்கி என்ற அதிகாரி ஏழு முறை  துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்.

எழும் கண்டனங்கள்
கடந்த மே மாதம் 25ஆம் தேதி அமெரி க்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்டு, காவல் அதிகாரியால் கொல்லப்பட்டதால் உலகம் முழுக்க போராட்டங்கள் வெடித்தன. மின்னசோட்டா தலைநகர் மினியா பொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ப்ளாய்டு  காவல்துறையினர் பிடியில் கழுத்து நெறிபட்டு இறந்தார். இந்த சம்பவத் திற்கு நீதிகோரி நடத்தப்பட்ட போராட்டங் கள் தணிவதற்குள் இத்தகைய சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்ற னர். ஜேக்கப் பிளேக் மீது நடத்தப் பட்டுள்ள துப்பாக்கிச்சூட்டை கண்டித்து  அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில  இடங்களில் போராட்டங்கள் வன்முறை யாக மாறியதில் காவல்துறை வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவை சேதத்திற்கு உள்ளாகின. இதையடுத்து இதுதொடர்பான விசாரணையை தொடங்கியுள்ள அமெரி க்க நீதித்துறை, வன்முறை சம்பவங் களை கட்டுப்படுத்துமாறு உத்தர விட்டுள்ளது.

;