நியூயார்க், ஏப். 1- கொரோனா வைரசின் தாக்குதலுக்கு உள்ளான இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் உயிரிழந்தார். நோய் பரவல் வேகமெடுத்து பலி எண்ணிக்கை 3800 ஆக உயர்ந்து சீனாவை விஞ்சியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் தாமஸ் டேவிட். இவர் நியூயார்க் சப்வே தொழிலாளியாவார். கொரோனா தாக்குதலுக்கு உள்ளான அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வெகு வேகமாக பரவி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 3800 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் மோசமான பாதிப்பை அமெரிக்கா சந்திக்கவிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். குறைந்தது ஒரு லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் எனவும், அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறப்பார்கள் என்று வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.