அமெரிக்கா அரசின் போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த இந்திய மாணவர்கள் உட்பட 90 வெளிநாட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியேற்ற மோசடியாளர்களை பொறி வைத்து பிடிக்க அமெரிக்க அரசே திட்டமிட்டு கடந்த 2015-ல் போலி பல்கலைக்கழகம் ஒன்றை டெட்ராய்ட் பெருநகரப் பகுதியில் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை மூலம் நிறுவத் திட்டமிட்டது. இந்த பல்கலைக்கழகம் ஃபார்மிங்டன் மலைப்பகுதியில் அமைந்திருப்பதால், இதற்கு ஃபார்மிங்டன் பல்கலைக்கழகம் என்று ஒரு போலியான பெயரும் வைக்கப்பட்டது.
இந்த போலி பல்கலைக்கழகத்தில், கடந்த மார்ச் மாதம் 600 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களின் ஆவணங்களை சரி பார்த்தபோது. இவர்கள் மாணவர்கள் அல்ல, மாணவர்கள் என்ற பெயரில் மாணவர் விசா எடுத்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் இந்தியர்களே அதிகம் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த இந்திய மாணவர்கள் உள்ளிட்ட 90 வெளிநாட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.