tamilnadu

img

உலகின் மிகப்பெரிய அணு இணைவு உலை ஒன்றுகூடல் தொடங்கியது

ஜூலை 27 அன்று, உலகின் மிகப்பெரிய அணு இணைவு உலை ஒன்றுகூடல் பிரான்சில் தொடங்கியது. இதுவே சர்வதேச தெர்மோநியூக்ளியர் பரிசோதனை உலை என அழைக்கப்படுகிறது.

இது ஐடிஇஆர் திட்டத்தின் கீழ் ஜப்பான், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளின் கூட்டு முயற்சியாகும். இது 2006 இல் தொடங்கப்பட்டது, இதில்  2035 க்குள் அதன்  மூலம் அதிகபட்ச மின் உற்பத்தியை அடைய திட்டமிட்டுள்ளது.

இதன் முதன் முயற்சியாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமீபத்தில் ஐஇஆர் உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகளுடன் கலந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.