கோவை, ஜூலை 21– இயற்கை வளங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஞாயிறன்று துவங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைவருக்கும் கல்வி, வேலை என்கிற முழக்கத்தோடு, ரத்ததானம் மற்றும் உழைப்புதானம் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக இருகூர் வாலிபர் சங்க கிளையின் சார்பில் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து இளைஞர்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இந்த வரிசையில் 4 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி துவக்கவிழா ஞாயிறன்று நடைபெற்றது. இருகூர் பகுதி யில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க கிளை செயலாளர் தீனதயாளன் தலைமை தாங்கி னார். கிளை தலைவர் பிரேம்குமார் வரவேற்புரையாற்றி னார். 32 அணிகள் மோதும் இப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணிக்கு 7 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை, இதேபோல இரண்டாவது, மூன்றாவது, அணிக்கு முறையே 5ஆயிரம் ரூபாய், 3ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து இயற்கை வளங்கள் பாதுகாப்பது குறித்து வாலி பர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் உரையாற்றினார். முன்னதாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் சண்முகம், விஜயராகவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.