தவெக மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களில் 80க்கும் மேற்பட்டோர் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. அக்கட்சியின் தொண்டர்கள் நேற்று இரவு முதல் மாநாட்டு திடலுக்கு வர தொடங்கினர். இந்த நிலையில், இன்று காலை வெயிலின் தாக்கம் காரணமாக 80க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர். மாநாட்டு திடலில் மயக்கம் அடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினரால் அவ்விடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், குடை பிடித்தபடியும், நாற்காலிகளை தலையில் கவிழ்த்தியபடியும், மாநாட்டுத் திடலில் அமர்ந்திருக்கும் தவெக தொண்டர்கள்.