எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “நாறும்பூநாதன் நெல்லை வட்டாரத்தை மையப்படுத்திய தனது இலக்கியப் படைப்புகளா லும், சமூகச் செயற்பாடுகளா லும் நன்கு அறியப்பட்ட முற்போக்கு இயக்க எழுத்தா ளராக விளங்கியவர். நமது அரசு நடத்தும் பொருநை இலக்கியத் திருவிழாவிலும் அவர் மிக முக்கியப் பங்காற் றினார் என்பதை நன்றியோடு இவ்வேளையில் நினைவு கூர்கிறேன். நாறும்பூநாதன் அவர் களது இலக்கியப் பங்களிப் புகள், சமூகச் செயற்பாடு கள், பள்ளி மாணவர்களி டையே இலக்கிய ஆர்வத் தைத் தூண்டுவதற்கான அவரது முன்னெடுப்புகள் ஆகிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி 2022 ஆம் ஆண்டுக் கான உ.வே.சா. விருதினை நமது அரசின் சார்பில் வழங்கியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை மண்ணின் இலக்கிய முகங்களில் ஒருவ ரான எழுத்தாளர் நாறும்பூ நாதன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத் தினருக்கும், அரசியல் – இலக்கியத் துறை நண்பர் களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலை யும் தெரிவித்துக் கொள் கிறேன்” என முதல்வர் தெரி வித்துள்ளார். துணை முதலமைச்சர் இரங்கல்! இவரது மறைவை யொட்டி, துணை முதலமைச் சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழ்நாடு அரசின் உ.வே.சா விருது பெற்றவர். யானை சொப்ப னம், திருநெல்வேலி நீர் - நிலம் - மனிதர்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தந்தவர். பொருநை இலக்கியத் திரு விழா - நெல்லை புத்தகத் திருவிழா உள்ளிட்டவற்றிற் காக முக்கிய பங்காற்றிய வர். எழுத்தாளராக மட்டு மன்றி, சமூக செயற்பாட்டாள ராகவும் பல்வேறு பங்களிப் பினை செய்த நாறும்பூ நாதன் அவர்களின் மரணம் தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரி ழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.