tamilnadu

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

நாகப்பட்டினம், ஜூலை 28- புதிய கல்வி வரைவுக் கொள்கை யை எதிர்த்தும், அதனைத் திரும்பப் பெற்றிட வலியுறுத்தியும் நாகை மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமை பிரச்சாரத்துடன் கூடிய கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. தலை ஞாயிறு ஒன்றியம் வெள்ளப்பள்ளம் கடைத்தெருவில் நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்திற்கு சி.பிஎம்.ஒன்றி யச் செயலாளர் ஏ.வேணு தலைமை வகித்தார். சி.பி.எம்.மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து விளக்கவுரையாற்றிக் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து வாட்டாக்குடி, துளசி யாப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. இதில் கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகைக் கடைத்தெருவில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத் திற்கு கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரி முத்து கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.