திருச்சிராப்பள்ளி, டிச.7- மேட்டுபாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும் பங்களுக்கு தலா ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உரிய நடவடிக்கைக் கோரி போராடிய வர்கள் மீது தடியடி நடத்திய போலீ சார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியானவர்கள் குடும் பங்களுக்கு முதல்வர் அளித்த வாக்கு றுதிகளை நிறைவேற்ற உடனடியாக தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமை அன்று ராம கிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மத்தியக் கட்டுப் ்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சி.பாண்டியன், சம்பத், ஜெய பால், ரெங்கராஜன், ரேணுகா, லெனின் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர் கள் ராமர், அன்வர், வேலுச்சாமி, மணி மாறன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குணா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மலைக்கோட்டை பகுதி செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.