கும்பகோணம், ஜூன் 30- புதிய தேசியக் கல்விக் கொள்கை திருத்தப்பட வேண்டியது அல்ல. திரும்பப் பெற வேண்டியது எனப் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான முழக்கப் போராட்டம் சனியன்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. நகரத் தலைவர் அனந்தசயனம் தலைமை ஏற்றார். தமுஎகச மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க நகரச் செயலர் தி.இதயராஜா, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க நகரச் செயலாளர் பழ,அன்புமணி, இந்தியத் தொழிற்சங்க மையம் மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன், வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.ராமன், மாணவர் சங்க மாவட்டத் துணைச் செயலர் ஜி.வீரையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமுஎகச நகரச் செயலர் கா.அசோக்குமார் நன்றி கூறினார்.