தரங்கம்பாடி, ஜூன் 30- நாகை மாவட்டம் திருக்களாச்சேரி தெற்குத்தெருவில் வசித்து வரும் ஜெகநாதன், குமார், முனியம்மாள் ஆகியோரது குடிசை வீடுகளும் அருகில் எரிந்து கொண்டிருந்த குப்பை மேட்டிலிருந்து காற்றில் பரவிய தீயால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. 3 வீடுகளிலும் இருந்த நகை, வீட்டு உபயோகப் பொருட்கள், குடும்ப அட்டை உள்ளிட்டவை தீயில் கருகின. சம்பவம் அறிந்து பாதிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்ட சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் இராசையன், வட்டக்குழு உறுப்பினர் காபிரியேல், செல்வராசு உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை எம்.எல்.ஏ., பவுன்ராஜ், வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் வழங்கினர். கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, உதவியாளர் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.