‘நல்ல செயல்களுக்கு துணைநிற்கும் நல்ல மனிதர்கள்’
மதுரை தமுக்கம் அருகே மாநகராட்சி அலுவலக வளாகத்தில் டிஎன்பி எஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வர்கள் படிப்பதற்காக திறந்தவெளி மாணவர் படிப்பு வளாகம் செயல்பட்டு வரு கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் முயற்சியால் உரு வாக்கப்பட்ட இந்த படிப்பு வளாகம் மதுரை மாநகராட்சியின் உதவியோ டும், மதுரை மிட் டவுன் கம்யூனிட்டி டிரஸ்ட் மதன் கண்காணிப்பில் செயல் பட்டு வருகிறது. இந்த படிப்பகத்தில் தினமும் 600க்கும் மேற்பட்டோர் போட்டித் தேர்வுக்கு படித்து வருகின்ற னர்.
இங்கு படித்து அரசு பணிக்குச் சென்றவர்கள் ஏராளமானோர். இந்நிலையில், மதுரை மாநகராட்சி படிப்பு வளாகத்தில் மாணவர்களின் நலனுக்கு முக்கிய பங்காற்றும் சு. வெங்கடேசன் எம்.பி.,க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதி பதி புகழேந்தி, “நல்ல செயல்களுக்கு துணை நிற்கும் நல்ல மனிதர்கள்” என பாராட்டுத் தெரிவித்துள்ளார். நீதிபதி புகழேந்தியின் பாராட்டுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., நன்றி தெரி வித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தின் பதிவில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை யில் மாணவர் படிப்பு வளாகத்தை, மதுரை மாநகராட்சியின் உதவியோடு உருவாக்கி நடத்தி வருகிறோம். ரோட்டரி மதுரை மிட் டவுன் கம்யூ னிட்டி டிரஸ்ட் சார்பாக மதன் தலைமை யிலான குழு இதனை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 600க்கும் மேற்பட்ட போட்டி தேர்வர்கள் இதனை பயன் படுத்தி வருகின்றனர். நாள் தோறும் காலை 4 மணிக்கு இந்த வளாகம் திறக்கப்படுகிறது. அந்த அதிகாலையிலேயே மாண வர்கள் உள்ளே வரக் காத்திருப்பார் கள். இரவு 11 மணிக்கு வளாகம் மூடப் படுகிறது. அந்த கடைசி நிமிடம் வரை படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் பலருண்டு. இது போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கான இடம், அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பதே நமது நோக்கம் என்ற உறுதியோடு இதனை உருவாக்கினோம். எண்ணற்ற இடையூறுகள், சவால்கள் வந்துள் ளன. அனைத்தையும் சமாளித்து இதனை முன்னெடுத்துச் செல்கிறோம்.
நல்ல செயல்களை செய்தால் அதனை ஆதரிக்க அநேகர் நம் சமூகத்தில் உண்டு என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை எமக்கு உண்டு. இந்த மாண வர் படிப்பக வளாகத்திலும் அந்த நம்பிக்கை மேலும் வலிமையடைந்து ள்ளது. திறந்தவெளி பூங்கா ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பகல் முழுவதும் படித்துக்கொண்டிருக்கும் காட்சியை பார்த்து செல்லும் ஒவ் வொருவருக்கும் நம் சமூகத்தின் மீதும், இளம் தலைமுறையினர் மீதும் உரு வாகும் நம்பிக்கை மிகப்பெரியது. இங்கு வைக்கப்பட்டுள்ள பார்வை யாளர் குறிப்பேட்டில் பலரும் மிகச்சிறப் பான குறிப்புகளை எழுதியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வளாகத்தை பார்வையிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி மாண்பமை புக ழேந்தி அவர்கள் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். அதில், “மிகச் சிறந்த முன்முயற்சி. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் இருக்கும் போதும் இங்கு சுமார் 600 மாணவர்கள் தினசரி வருகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக் கிறது. மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் மற்றும் இந்த மையத்தின் நிர்வாகி மதனுக்கு எனது பாராட்டுக்கள். ஒரு டிஜிட்டல் படிப்பு மையத்தை உருவாக்கவும் மாண வர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தும் சாத்தியங்களையும் நிர்வாகிகள் ஆராயலாம்.
வாழ்த்துகள்” என பாராட்டியுள்ளார். மாண்பமை நீதிபதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எப்பொழுது வந்து இந்த வளாகத்தை பார்வை யிட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரி யாது. பார்வையாளர் குறிப்பேட்டில் நீங்கள் எழுதிச் சென்றுள்ளதை பார்த்த பின் தான் நீங்கள் வந்து சென்றதை நாங்கள் அறிந்து கொண்டோம். நல்ல செயல்களை பொறுப்போடு முன்னெடுக்கும் பொழுது நல்ல மனி தர்கள் அனைவரும் அதற்கு துணை நிற்பார்கள் என்பதை உங்களின் எழுத்துகள் எங்களின் கரம் பற்றிச் சொல்கிறது. உங்களுக்கு எங்களின் அன்பான நன்றி. நீங்கள் குறிப் பிட்டுள்ளதைப் போன்று மாணவர் களுக்காக மின்னணு நூலகத்தை உரு வாக்கவும், மாதிரி தேர்வுகளை நடத்த வும் முயற்சியை மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என சு.வெங்கடேசன் எம்.பி., கூறி யுள்ளார்.