திருவள்ளூர், செப்.11- திருவள்ளூர் நகராட்சி அன்னை தெரேசா நகர் பகுதி யில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை தொட்டிக ளில் அடைப்பு ஏற்பட்டு ள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் ஆறுபோல் ஓடு கிறது. மேலும் ஆங்காங்கே குட்டைகள் போல் தேங்கி நிற்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியும் அதி கரித்துள்ளதால் தொற்று நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் நகராட்சி அதிகாரியிடம் கடந்த மாதம் மனு கொடுத்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் நகராட்சி அதிகாரிகள் காலம் கடத்தாமல் பாதாள சாக்கடையை உடனே சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.