tamilnadu

img

தண்ணீர் சேமிப்பு: தாராபுரத்தில் மாரத்தான்

தாராபுரம், ஜூன் 23- தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி தாராபுரத்தில் ஞாயிறன்று மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் சேமிப்பின் அவசி யத்தை குறித்து மாரத்தான்  ஓட்டம் துவங்கியது. மாரத் தான் ஓட்டத்தை துணை ஆட்சியர் தலைமையில், மாவட்ட காவல் துணை கண்காணிப் பாளர் வேலுமணி துவக்கி வைத்தார்.  மாரத்தான் ஓட்டம் பெரியகடைவீதி, அலங்கியம் சாலை வழியாக சென்று அரபிந்தோ பள்ளியில் முடிவடைந்தது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி மாணவ,  மாணவியர்கள், பெற்றோர்கள், வியா பாரிகள் என சுமார் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.