அவிநாசி, ஜூன் 8– அவிநாசி அருகேயுள்ள கருவலூர் வாரச்சந்தை ஏலம் விடப்பட்டது. அவிநாசி ஊராட்சி ஒன் றியத்துக்கு உட்பட்டு, கருவ லூரில் வாரச்சந்தை செயல் படுகிறது. இங்குள்ள கடை கள், வாரச்சந்தையை பரா மரிக்கும் பொறுப்பு ஆண் டுக்கு ஒருமுறை குத்த கைக்கு விடப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதமே கடந்த குத்தகைதாரருக் கான உரிம காலம் முடிந்து விட்ட நிலையில், நாடாளு மன்ற தேர்தல் அறிவிப்பால் வாரச்சந்தை ஏலம் நடத்தப் படவில்லை. சில நிபந்த னைக்குட்பட்டு, பழைய குத் தகைதாரருக்கே, குத்தகை உரிமம் நீட்டித்துக் கொடுக் கப்பட்டது. இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதியுடன் நீட்டிக்கப் பட்ட குத்தகைக்கான உரிம காலமும் முடிந்துவிட்ட நிலையில் வெள்ளியன்று ஏலம் நடந்தது. மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர், வாணிஸ்ரீ ஆகி யோர் முன்னிலையில் நடந்தஇந்த ஏலத்தில் கடந்தாண்டு ஏலம் எடுத்த குத்தகைதாரர் ராதாமணி என்பவரே 90 ஆயிரம் ரூபாய்க்கு இம்முறையும் ஏலம் எடுத்தார். கடந் தாண்டு ஏலத்தை விட இது 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.