tamilnadu

img

தலித் கிறித்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உடனடியாக இணைக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி, ஆக.11- பாளையங்கோட்டை மறை மாவட்டம் எஸ்.சி.-எஸ்.டி பணிக்குழு, தென் மண்டல தலித் கிறித்தவர் விடு தலை இயக்கம் மற்றும் இந்திய தலித் கிறித்தவர் நல இயக்கம் சார்பில் துக்க நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. உடையார்பட்டியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு பாளை மறைமாவட்ட தொடர்பாளர் சேவியர் டெரன்ஸ் அடி களார் தலைமை வகித்தார். தூய சவேரி யார் கலைமனைகள் செயலர் முனை வர் ஹென்றி ஜெரோம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.  இந்திய தலித் கிறித்தவ நல இயக்க நிறுவனர் பாஸ்டர் தனராஜ் துக்க நாள் சிறப்புரையாற்றினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ. பழனி, வான்முகில் அறக்கட்டளை இயக்குநர் வழக்கறிஞர் பிரிட்டோ, ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் ஜெய மேரி, ஐடிசிடபிள்யுஎம் மாநிலத் தலைவர் டாக்டர் ராம்நாத் உள்ளிட் டோர் கருத்துரையாற்றினர்.  மத்திய அரசு, குடியரசுத்தலைவர் கையெழுத்திட்ட ஆணை 1950-ன், 3வது பாகத்தை நீக்க வேண்டும். தலித் கிறித்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உடனடியாக இணைக்க நீதி யரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எஸ்.சி.-எஸ்.டி. பணிக்குழு செய லாளர் சேவியர்ராஜ், அலுவலக பணி யாளர் சலேத் மேரி, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ராஜேந்தி ரன், தென்காசி மறைமாவட்ட ஒருங்கி ணைப்பாளர் அந்தோணிராஜ், சங்க ரன்கோவில் மறைமாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சிங்கராஜ், அம்பை மறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ப ரசி, கோவில்பட்டி மறைமாவட்ட ஒருங் கிணைப்பாளர் தெய்வராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.