தேனி, ஜூன் 7- கொரோனா பாதிப்பு நிவார ணம் கோரி தேனி மாவட்டத்தில் 100 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ,இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிகள் இணைந்து ஆர்ப் பாட்டம் நடத்த முடிவு செய்துள் ளது. இது தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட் டக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செய லாளர் டி.வெங்கடேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் எல்.ஆர்.சங்கரசுப்பு, தேனி தாலுகா செயலாளர் சி. சடையாண்டி, சிபிஐ மாவட்டச் செயலாளர் வே.பெத்தாட்சி ஆசாத், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.திருமலைக்கொழுந்து, மாவட்டத் துணைச்செயலாளர் கே.இளையராஜா, பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றி யங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.