தஞ்சாவூர், மே 19- மின்சார சட்டத்திருத்த மசோதாவை கண்டித்தும், யூனியன் பிரதேசங்களில் மின்விநியோகத்தை தனி யார் மயமாக்கும் மத்திய நிதியமைச்சரின் அறி விப்பைக் கண்டித்தும், தஞ்சை மாவட்டம் முழுவதும் 15 இடங்களில், மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், தஞ்சாவூர் நகரியம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்த நாடு உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர். எஸ்.ராஜா ராமன், வட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ், வட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக் கேல்ராஜ், வட்டப் பொருளா ளர் எம்.ஆரோக்கியசாமி, நிர்வாகிகள் சங்கர், ரவி, தேவேந்திரன், மணிவண் ணன், ராதா, ஷேக் அகமது உஸ்மான் உசேன், ராஜப்பா, மற்றும் சம்மேளனம் (ஏஐடியுசி) நிர்வாகிகள் தங்கவேலு, முபாரக் பாட்சா, தொமுச நிர்வாகி ஆண்ட் ரூஸ் கிறிஸ்டி, ஐக்கிய சங்கம் (ஹெச்.எம்.எஸ்)நிர்வாகி ராகவன், பொறியாளர் சங்கம் நிர்வாகி சுந்தர்ராஜ், பொறியாளர் கழக நிர்வாகி மகாலிங்கம் உள்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.