tamilnadu

img

‘செங்கொடியை உயர்த்திப் பிடிப்போம்’ தோழர் கோ.வீரய்யன் நினைவில் உறுதி ஏற்போம்

கும்பகோணம், டிச.10-  செங்கொடியின் புதல்வர், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் தோழர் ஜீவி என்றழைக்கப் படும் ஜி. வீரையன் முதலாம் ஆண்டு  நினைவு நாள் படத்திறப்பு நிகழ்ச்சி அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை ஏற்றார். தோழர் ஜீவி உருவப் படத்தை மாநிலத் தலைவர் ஏ. லாசர் திறந்து வைத்தார். தொடர்ந்து மாநிலச் செயலாளர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் கே. பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் வாசு, சிபிஎம் குடந்தை ஒன்றியச் செயலாளர் பி. ஜேசுதாஸ், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பழனிவேல், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, நகரச் செயலாளர் செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் எம். கண்ணன் ஆகியோர் தோழர் ஜீவி யின் உழைப்பும் போராட்ட வெற்றி குறித்து புகழ் அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மாநிலத் தலைவர் லாசர் பேசுகையில், எளிமையான நடுத்தர குடும்பத்தில் பிறந்து விவசாயிக ளுக்கும், விவசாயத் தொழிலாளர்க ளுக்காக கடுமையான போராட்டங்க ளை சந்தித்து வெற்றி கண்டு கீழத் தஞ்சை மாவட்டத்தில் ஒரு மாபெரும் மனிதனாக, கம்யூனிஸ்ட் இயக்கத் தின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணை யாக இருந்த தோழர் ஜீவி அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் ஆவார். அவர் உயர்த்திப் பிடித்த செங்கொடியை நாமும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என உறுதி ஏற்க வேண்டும் என்றார்.