தஞ்சாவூர் நவ.24- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் பட்டுக்கோட்டை கிளை சார்பில், பாப்பாநாடு இளம் விஞ்ஞானி அர்ச்சனா வுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் வழி யில் பயிலும் மாணவி அர்ச்சனா. கரூரில் சமீ பத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் அர்ச்சனா காட்சிப்படுத்திய “மாற்று நெகிழிப் பை” மாநில அளவில் முதல் பரிசு பெற்றி ருக்கிறது. அவரது கண்டுபிடிப்பு அனைவரை யும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. பிளாஸ்டிக் பைகளால் பூமியின் எதிர் காலமே கேள்விக் குள்ளாக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்க்க வேண்டி அரசும், பொது அமைப்புகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கிறது. இறந்து போன மாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் நிறைந்திருந்தையும், அதனால் மாடு உயிரிழந்ததையும் கண்டு வேதனை அடைந்த அர்ச்சனா அன்று முதல் மக்காத கேரிபேக்கு களுக்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் தீவிரமாக முயற்சி செய்து வந்திருக்கிறார். இதையடுத்து அறிவியல் கண்காட்சி நடப் பதை பயன்படுத்திக்கொண்ட அர்ச்சனா ஆசிரி யர் ஜென்சி ரூபா உதவியுடன் மக்காச்சோள மாவில் வினிகரை கலந்து சூடுபடுத்தவே பயோ நெகிழிக்கான மூலம் கிடைத்து உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர், அகில இந்திய அள வில் நடைபெறும் கண்காட்சியிலும் பங்கேற்க இருக்கிறார். அரசுப்பள்ளியில் படித்து சாதனை படைத் திருக்கிற அர்ச்சனாவை பாராட்டும் வகையில், பட்டுக்கோட்டை தமுஎகச கிளை சார்பில் மாண விக்கு சால்வை அணிவித்து, மகா கவி பாரதி கவிதைகள் புத்தகம் வழங்கி சிறப்பு செய்யப் பட்டது. தலைமையாசிரியர் கருணாநிதி மற்றும் ஆசிரியர் ஜென்சி ரூபாவுக்கும் புத்த கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் தி.தனபால் மாணவியை வாழ்த்திப் பேசினார். கிளைத் தலைவர் முருக.சரவணன், கிளைச் செயலாளர் மோரீஸ் சரவணன், மூத்த தோழர் எஸ். பாலகிருஷ்ணன் மா.பசுபதி டபிள்யூ.கிருஸ்துதாஸ், கேசவன், மா.பன்னீர் செல்வம், வீ.சாமிநாதன், திராவிட பிரகாஷ், அபெக்ஸ் சுரேஷ், கார்த்திக் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.