tamilnadu

img

குளம் சீரமைப்பு பணிக்கு உதவிய மக்களுக்கு விழா

தஞ்சாவூர், அக்.8- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இளைஞர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த வர்கள் சார்பில் அமைக்கப்பட்ட கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புகளின் சார்பில், பேரா வூரணி பெரியகுளம் சீரமைப்பு பணி நிறைவு விழா, நன்கொடையாளர்களுக்கு மரக்கன்று கள் வழங்கி நன்றி செலுத்தும் விழா, சேந்தங் குடி மரம் தங்கச்சாமி நினைவாக மரக்கன்று கள் நடும் விழா என முப்பெரும் விழா திங் கள்கிழமை அன்று நடைபெற்றது.  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார், கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், திருநெல் வேலி உதவி ஆட்சியர் எம்.சிவகுரு பிரபா கரன், பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெய லெட்சுமி, தஞ்சை பொதுப்பணித்துறை நிர்வா கப் பொறியாளர் ஏ.குமரேசன், புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மு.சுப் பையா, மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் டாக்டர் சி.கோபிநாத், காரைக்குடி ஊர்கூடி ஊரணி காப்போம் இயக்கம் வள்ளி சரண் ஆகியோர் பேசினர். பேராவூரணி பத்திரிகை யாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களுக்கு விருது வழங்கப்பட்டது.  நன்கொடையாளர்களுக்கு மரக்கன்று கள் வழங்கி பொன்னாடை அணிவிக்கப்பட் டது. பெரியகுளம் ஏரிக்கரையில் மரக்கன்று நடப்பட்டது. விழாவிற்கு சங்கத்தின் தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். நவீன் ஆனந்த் வரவேற்றார். நிர்வாகிகள் தங்க.கண்ணன், கார்த்திகேயன், பார்த்திபன், திரு வேங்கடம், நிமல் ராகவன் மற்றும் நகரப் பிர முகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக எம்.ஆர்.பாஸ்கர் நன்றி கூறினார்.