தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை மன்ற விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தலைமை வகித்தார். காரைக்குடி அழகப்பா முன்னாள் பல்கலைக்கழகப் பேராசிரியர் நெடுமாறன் சிறப்புரையாற்றினார். “இன்டர்வியு டெக்னிக்” எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக வணிகவியல் துறைத்தலைவர் நா.பழனிவேலு வரவேற்றார். வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக பேராசிரியர் முத்து கிருஷ்ணன் நன்றி கூறினார்.