tamilnadu

img

தாய்ப்பால் வாரவிழா கர்ப்பிணி பெண்களுக்கு  பழங்கள் வழங்கல்

 தஞ்சாவூர், ஆக.6- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலகத் தாய்ப்பால் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மருத்துவ அலுவலர் சரண்யா ரஞ்சித் தலைமை வகித்து சிறப்புரை யாற்றினார். ரோட்டரி சங்கத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணன், செயலாளர் சி.முத்தரசன், பொருளாளர் ஜெ.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார ஆய்வாளர் பாலச்சந்திரன் வரவேற்றார்.  வர்த்தக கழகப் பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் அபிராமி ஆர்.சுப்பிரமணியன், என்.பி. நீலகண்டன், எஸ்.நாகராஜன், என்.ஆனந்தன், எல்ஐசி கே. நீலகண்டன், எல்ஐசி டி.ராமச்சந்திரன், கே.பி.எல்.ரமே‌ஷ், செவிலியர்கள் ராஜேஸ்வரி, ஜெயலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் 36 கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள், பிரட் ஆகியவை வழங்கப்பட்டது.