சென்னை,நவ.1- அரசுத் துறைகளில் தற்காலிக பணியில் உள்ள பெண் ஊழியர் களுக்கும் மகப்பேறு விடுப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுத் துறைகள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் 9 மாதங்கள் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 6 மாதங்களாக இருந்த விடுப்பு 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது. அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கி யதைப் போல் தற்காலிக முறை யில் பணியாற்றும் பெண் ஊழி யர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கும் உத்தரவை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது.