tamilnadu

சேலத்தில் மினி ஆட்டோ, லாரி மோதி விபத்தில் 4 பேர் பலி

சேலம், மே 26-சேலம்-கோவை தேசிய நெஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம், ஒமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து கறி விற்பனைக்காக மாடு ஏற்றிக்கொண்டு மினி ஆட்டோ சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டலாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. சனியன்று இரவு 1 மணியளவில் கந்தம்பட்டிமேம்பாலத்தின் மீது சென்றபோது முன்னே சென்ற லாரி தனது வேகத்தை சட்டென்றுகுறைத்ததால் நிலைதடுமாறிய மினி ஆட்டோ லாரியின் பின்பக்கம் மோதியது. மேலும் மினி ஆட்டோவை பின்தொடர்ந்துவேகமாக வந்த மற்றொரு லாரி மினி ஆட்டோவின் பின்புறம் வேகமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கிய மினி ஆட்டோ முற்றிலுமாக சிதைந்தது.அதில் மினி ஆட்டோவில் பயணம் செய்த கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ், பாலு மற்றும் ஷாருக்கான்ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த ஓட்டுநர் சாதிக்பாட்ஷா (44) சிகிச்சைக்காக சேலம்அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து காரணமாக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார்ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கட்டது. தீயணைப்பு வீரர்கள்மற்றும் காவல்துறையினர் சம்பவஇடத்திற்கு சென்று லாரிகளுக்கு இடையில்சிக்கியிருந்த மினி ஆட்டோவை கிரேன்கொண்டு அப்புறப்படுத்தினர். இந்தவிபத்து தொடர்பாக சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.