முதலமைச்சர் உள்ளிட்டோர் கூறு வதுபோல், தமிழகத்தில் கொரோனா பரி சோதனை விகிதம் அதிகம் இல்லை. 10 லட்சம் பேருக்கு 16 ஆயிரத்து 663 பேருக்குதான் பரிசோதனை நடைபெறு கிறது. டெல்லியில் தமிழகத்தை விட சுமார் 2 மடங்கு அதிக பரிசோதனை நடக்கிறது. கொரோனா பரிசோதனை யில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. நாட்டிலேயே அதிக அளவாக தில்லி யில் 10 லட்சம் பேரில் 32 ஆயிரத்து 863 பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆத்திரப்பிரதேசம் 10 லட்சம் பேரில் 18 ஆயி ரத்து 597 பேருக்கு பரிசோதனை நடத்துகிறது. இதனை நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.