திருப்பூர், ஆக. 22 – திருப்பூர் திலகர் நகர்ப் பகுதியில் 12 நாட்கள் குடிநீர் வழங் காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்ட அறைகூவலை விடுத்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் வழங்க உறுதியளித்தனர். திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது வார்டுக்குட்பட்ட திலகர் நகர் பகுதியில் 13 நாட்களுக்கு ஒருமுறை, மிகக்குறைந்த அழுத் தத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் தலைமையில் கடந்த ஆக.6 அன்று தில கர் நகர்ப் பொதுமக்கள் திரண்டு சென்று முதலாம் மண்டல அலுவலகத்தில் முறையிட்டனர். அதற்குப் பிறகும் 15 நாட்களா கியும், இடையில் நினைவூட்டியும் கூட, குடிநீர் வழங்கப்பட வில்லை. எனவே, வெள்ளியன்று மாலை காலிக் குடங்களு டன், குடிநீர் வழங்கும் வரை வீதிகளில் மறியல் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித் தது.
இதனை அறிந்து, திலகர் நகர் பகுதிக்கு மாநகராட்சி உதவிப் பொறியாளர் சந்திரசேகரன், குழாய் ஆய்வாளர் சுகுமார் ஆகியோர் வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி, சனி யன்று காலையில் இரண்டரை மணி நேரத்திற்கு, சரியான அழுத்தத்தில் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தனர். மேலும், வாரம் ஒரு முறை குடிநீர் வழங்கவும் உறுதியளித்த னர். அவர்களது, உறுதிமொழியை ஏற்று போராட்ட முடிவு கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப் பிரமணியம், மாநகரக்குழு உறுப்பினர்கள் ச.நந்தகோபால், பி.சின்னச்சாமி, வாலிபர் சங்க நகரப் பொருளாளர் எஸ்.ராம்கி ஆகியோர் பங்கேற்றனர்.