புதுக்கோட்டை, அக்.21- புதுக்கோட்டையை அடுத் துள்ள குளத்தூர் மகாத்மான மழ லையர் பள்ளியில் சனிக்கிழமை யன்று சமூகவியல் திருவிழா நடை பெற்றது. விழாவிற்கு சாகித்ய அகாதமியின் முன்னாள் ஆலோச ணைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். ரோட்டரி துணை ஆளு நர் ஜெய்சன்கீர்த்தி ஜெயபரதன் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் உமாதேவி, துரைராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேரா.சீத்தாலெட்சுமி, கல்வி யாளர் பி.கருப்பையா, பாஸ்கரன், அனிஷ்ரகுவரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 150-க்கும் மேற் பட்ட மாணவர்கள் சமூகவியல் படைப்புகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.