tamilnadu

img

சிஐடியு, மருந்து விற்பனை பிரதிநிதி சங்க புதிய அலுவலகம் திறப்பு

ஈரோடு, அக்.12- சிஐடியு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் புதிய அலுவலகம் மற்றும் போட்டித் தேர்வு களுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு விழா வெள்ளியன்று ஈரோட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மூத்த தலைவர் முருகையா தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் டி.ஜான்சன் கென்னடி வர வேற்றார். இந்த புதிய அலுவல கத்தை சிஐடியு மாநில தலைவர் அ. சவுந்தரராசன் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து கூட்ட அரங்கத்தை சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன், மருந்து விற்பனை பிரதிநிதி சங்க அலுவலகத்தை பொதுச் செயலா ளர் பிரபாகர் தேவதாஸ், அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சங்க அலுவல கத்தை சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும், சிஐடியு மாவட்ட குழு அலு வலகத்தை மாவட்ட துணைத்தலைவர் ஆர்.ரகுராமன், வரவேற்பு ஓய்வு அறை யை அரசு போக்குவரத்து ஓய்வு பெற் றோர் மாவட்ட தலைவர் ஜெகநாதன், நிர்வாக அலுவலகத்தை மருந்து விற் பனை பிரதிநிதி சங்க நிர்வாகி ஆர்.இளங்கோ ஆகியோர் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இதேபோல், மாணவர்கள் போட்டித் தேர்வு இலவச பயிற்சி மைய வகுப்பறைகளை மருத்துவர்கள் கே.எம்.அபுல்ஹாசன், கே.விஸ்வநாதன், எம்.ராஜேந்திரன் மற்றும் ஆர்.மனோகரன், மீனாட்சி மெடிக்கல் ஏஜென்சீஸ் உரிமையாளர் வி.எஸ்.பழனிவேல் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சங்க தலை வர்கள் உருவப்படங்களை மருந்து விற்பனை பிரதிநிதி சங்க பொருளாளர் வெங்கடேசன், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன உதவி தலைவர்கள் எம்.சந்திரன், ஏ.பி.அன்பழ கன் ஆகியோர் திறந்து வைத்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்பிரமணியன், மருந்து விற்பனை பிரதி நிதி சங்க மாநில தலைவர் பி.சத்யநாரா யணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில், சிஐடியு மாநில தலைவர் அ. சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். மருந்து விற்பனை பிரதிநிதி சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.நாராயண சாமி நன்றி கூறினார். இந்நிகழ்வில் திர ளானோர் கலந்து கொண்டனர்.