புதுச்சேரி, அக். 2- மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா புதுச்சேரியில் பாதயாத்திரையுடன் நடைபெற்றது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சமுக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, மக்களவி உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத், மற்றும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் காந்தியடிகளின் பாதயாத்திரை காந்தி திடலில் இருந்து புறப்பட்டு, ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழயாக காந்தி சதுக்கத்தை வந்தடைந்தது.