tamilnadu

img

வடலூர் தருமச் சாலையில் மூன்று வேளையும் உணவு

சிதம்பரம், மே 2- கொடையுள்ளம் கொண்ட 40 பேர் தானமாக வழங்கிய 80 காணி நிலத்தில், 1867 மே 23ஆம் தேதி  வடலூரில் சத்திய தருமச்சாலையை தோற்று வித்தார் வள்ளலார்.

153 ஆண்டுகளுக்கு முன், அவர் தீ மூட்டிய அணையா அடுப்பு, பொதுமக்களின் பங்களிப் புடன் பசியுடன் வருவோருக்கு 3 வேளையும் உணவு வழங்கும் அட்சய பாத்திரமாக விளங்கு கிறது. வடலூர் தருமச்சாலையில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோர், உற்றார் உறவினர்களால் கைவிடப்பட்டோர் என 600 பேருக்கு நாள்தோறும் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஊரடங்கால் உணவுக்கு வழி யின்றி அவதியுறும் சிலர் தொலை தூரத்தில் இருந்து  நடைப யணமாகவே வடலூர் தருமச்சாலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரு வோரை மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி தனி மைப்படுத்தி, மருத்துவப் பரிசோதனைக் குட்படுத்தி, தனி முகாம் அமைத்து, சமூக இடை வெளியை கடைபிடிக்க அறிவுறுத்தி தருமச்சாலை  நிர்வாகிகள் உணவு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாள்தோறும் 1,700  முதல் 2,000 பேருக்கு 3 வேளையும் இங்கு உணவு  வழங்கப்படுகிறது.