tamilnadu

img

கிராமங்களை அறிவோம் நிகழ்ச்சி பழங்குடியினர் வாழ்வு நிலை குறித்த ஆய்வு

உதகை, ஜன. 30- கூடலூர் அரசு கலைக்கல்லூரி சமூக பணி துறை மாணவர்கள் பழங்குடியினர் வாழ்வு நிலை குறித்த ஆய்வு செய்யும் வகையில் கிராமங்களை அறிவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு கலைக்கல்லூரி சமூக பணி  துறையில் பயிலும் மாணவர்க ளுக்கு பழங்குடியினர் வாழ்வு நிலை குறித்த கிராமங்களை அறி வோம் நிகழ்ச்சி நடைபெற்று வரு கிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் முகாமில் பழங்குடியினர் கிராமங் களுக்கு சென்று அவர்கள் வாழ்க்கை நிலை குறித்து கேட்ட றிந்து அவர்களுடன் கலந்துரை யாடல், கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மரக் கன்றுகள் நடுதல் போன்ற பணி கள் மேற்கொள்ள உள்ளனர்.   இம்முகாமின் ஒரு பகுதியாக சமூக பணி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது. அம்பலமூலா ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் செவ் வாயன்று நடைபெற்ற நிகழ்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி சமூக பணி துறை பேராசிரியர் அனுஷ்யா முன்னிலை வகித்தார். இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட கூடலூர் பசுமை மீட்பு குழு தலைவர் அன்பரசன் பேசு கையில், பழங்குடியினர் தங்களது அன்றாட வாழ்கையில் இயற்கை யோடு இணைந்து வாழ்ந்து வரு கின்றனர். இந்நிலையில் தற் போது அவர்கள் சிக்கில் செல் அனீமியா நோயால் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.  இது போன்ற சூழல் அவர்களின் பரம்பரை அழிவை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறது.பழங் குடியினர் குறித்த கள ஆய்வு  மற்றும் வளர்ச்சிக்கு, அவர்களுக் கான கல்வி, வேலைவாய்ப்பு, சேமிப்பு போன்றவற்றை உரு வாக்க சமூக பணி துறை மாணவர் கள் திட்டமிட வேண்டும் என்றார். அதேபோல் இம்முகாமில் கூட லூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசுகையில், மாணவர்களின் சமூக பணி மக்க ளின் மனதில் நிற்கும் வகையாக இருக்க வேண்டும்.  மக்களிடையே ஊட்ட சத்து குறைபாடு அதிக ரித்து வருகிறது.  இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகி றது. 38 சதவிகித குழந்தைகள் ஊட்டசத்து குறைப்பாட்டுடன் பிறக்கிறது.  இளம் வயது முதலே  ஊட்டசத்துக்கள் உள்ள உணவு களை எடுத்து கொள்ள வேண்டும். அயோடின், இரும்பு சத்து கலந்த உப்பு தற்போது ரேசன் கடைகளில் கிடைக்கிறது.  அவற்றை பயன்ப டுத்தி கொள்வதன் மூலம் பல் வேறு நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம் என்றார். இந்நிகழ்ச்சியில் சமூக பணித் துறை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.