உதகை,மார்ச் 2- உதகையில், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதைக் கண்டித்து கொட்டும் மழையிலும் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் துறை பங்குகள் விற்பனை, தனி யார்மயமாக்கள் மற்றும் தொழிலா ளர் நல சட்டங்களை திருத்துவ தைக் கண்டித்து சிஐடியு தொழிற் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஜே.ஆர்.துறை தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ரமேஷ் துவக்கி வைத்து பேசினார். மாவட் டப் பொருளாளர் நவீன் சந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.சங்கரலிங்கம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கத்தின் கோட்டத் தலை வர் கோபால், பொருளாளர் சதாசி வம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கடும் மழையிலும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.