tamilnadu

img

அரசியல் பேசும் கலைஞர்களுக்கு பாஜக மிரட்டல்

கொச்சி, டிச.24- அரசியல் பேசும் திரைக்கலைஞர்கள் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய திரைக்கலைஞர்களுக்கு எதிராக பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ளனர். ஒலிபெருக்கியையும் மக்கள் திரளையும் பார்த்த உடன் அரசியல் உரை நிகழ்த்தும் திரைப்படத்துறையினர், போராடிய நடிகையரது தந்தை, சகோதரன், செயலாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வருமான வரி செலுத்துகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் யுவமோர்ச்சா தலைவர் சந்தீப் வாரியார் தனது முகநூல் பதிவு மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். வரி செலுத்தாமல் திரைத்துறையினர் ஏமாற்றுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பழிவாங்குவதாக கண்ணீர் வடிக்கக்கூடாது எனவும் தனது அவர் தெரிவித்துள்ளார்.   போராட்டம் நடத்திய திரைத்துறையினருக்கு தேசபக்தி இல்லை எனவும், போராடியது தவறு எனவும் இவர்களது தேசபக்தி பாசாங்கு எனவும் பாஜக முன்னாள் தலைவரும் முன்னாள் மேகாலயா ஆளுநருமான கும்மனம் ராஜசேகரன் கூறினார்.   கும்மனம் ராஜசேகரனின் கையில் அல்ல தேசபக்தியை அளக்கும் கருவி என இயக்குநர் கமல் பதிலளித்துள்ளார். கலைஞர்களை அச்சுறுத்த முயற்சிக்க வேண்டாம் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் பார்த்தால் பாஜகவினர் அச்சடைகிறார்கள் எனவும் அவர் கூறினார். என்.எஸ்.மாதவன், கமல், ராஜீவ்ரவி, திரைக்கதாசிரியர் வேணு, ஆஷிக் அபு, ரீமா கல்லிங்கல், லிஜோ ஜோஸ் பெல்லுச்சேரி, மணிகண்டன், பி.எப்.மாத்யூஸ், நிமிஷா சஜயன், ஷெயில் நிகம் உள்ளிட்டோர் பங்கேற்ற பேரணியே பாஜகவினரை அச்சறுத்தி உள்ளது.