tamilnadu

2ஜி,ஏர்செல் வழக்குகள்  வேறு அமர்வுக்கு மாற்றம் 

 புதுதில்லி,செப்.17- நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி, ஏர்செல் வழக்குகளை நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வுக்கு தில்லி உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி. சைனி இந்த மாதம் இறுதியில் ஓய்வுபெறுகிறார். இத னால் அந்த வழக்குகளை தில்லி உயர் நீதி மன்றம் நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வு க்கு மாற்றியுள்ளது. ப.சிதம்பரம், கார்த்தி சிதம் பரம் தொடர்பான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை நீதிபதி அஜய்குமார் விசாரித்து வருகிறார்.  2ஜி ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்களை விடுவித்து 2017ஆம் ஆண்டு டிசம்பரில் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து.இந்த தீர்ப்பினை அளித்தவர் நீதிபதி ஓ.பி.சைனி. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை விடுவித்தவரும் நீதிபதி ஓ.பி.சைனிதான். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5 ஆம் தேதி முன்ஜாமீன் வழங்கினார். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து ஒத்தி வைக்கக் கோருவதால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக கடந்த 6ஆம் தேதி நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிபதி ஓ.பி.சைனி ஓய்வுபெற உள்ளதால் 2ஜி முறைகேடு,ஏர்செல் வழக்குகளை சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் விசாரிப்பார் என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.