நாமக்கல், அக்.24- பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் போனஸ் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற் படாததால், விசைத்தறி தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிப் பாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு விசைத்தறி தொழிலாளர்சங்கத்தின் தலைமையில் விசைத்தறி தொழி லாளர்கள் பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விசைத்தறி உரிமை யாளர் சங்கம், தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சு வார்த்தை புதனன்று நடைபெற்றது. இதில் விசைத்தறி தொழிலில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக கூறி போனசை உயர்த்தி வழங்க முடியாது எனவும், ஏற்கனவே வழங்கி வந்த 9.5 சதவிகித போனசை கூட இந்த ஆண்டு வழங்க இயலாது என உரிமையாளர்கள் தரப்பில் தெரிவித் தனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வருவாய் ஆய் வாளர் அலுவலகம் முன்பு சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பள்ளிப்பாளையம் ஒன்றியத் தலைவர் ஏ.அசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மாவட்ட தலைவர் கே.மோகன், துணைத் தலைவர் கே.குமார், பொருளாளர் பி. முருகேசன், அங்கமுத்து மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் இ.கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட் டத்தின் முடிவில் வருவாய் ஆய்வா ளரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.