நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது
அநியாய வரி உயர்வு, சூயஸ் நிறுவனத்தின் குடிநீர் கொள்ளை
கோவை, ஆக.27 - குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ளதை கண்டித்தும், அநியாய சொத்துவரி உயர்வை கண்டித்தும் கோவை குனிய முத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் மற்றும் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் உட்பட 500க்கும் மேற்பட்டோர் செவ்வா யன்று கைது செய்யப்பட்டனர். கோவை மாநகரின் குடிநீர் விநியோகம் பிரான்ஸ் நாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியும், சொத்து வரியை தன்னிச்சையாக கடுமையாக உயர்த்தியும் அதி காரிகள் தனி ராஜ்யம் நடத்தி வருகின்றனர். இதனை கண்டித்து கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தை செவ்வா யன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகைப் போராட்டத் தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், திமுக மாவட்டச் செயலாளர்கள் சி.ஆர்.ராமச்சந்திரன், தென்றல் செல்வராஜ், காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் வி.எம்.சி.மனோகரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா, மாவட்டக்குழு உறுப்பினர் என்.வி.தாமோதரன், தெற்கு நகர செயலாளர் நாகேந்திரன், மதுக்கரை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தின்போது, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். சூயஸ் நிறு வனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்ட னர். இதுகுறித்து செய்தியாளர்களி டம் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், கோவை மாநகராட்சியில் சொத்து வரி கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளது. இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 26 ஆண்டு காலத்திற்கு கோவை மாநகர குடிநீர் உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதை போல ஒப்பந்தம் போட்டுள்ளனர். சிறிதும் பெரிதுமாக 10 அணை கள் கொண்ட நமது கோவை மாவட்டத்தில் குடிநீர் உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்குவது ஏற்புடையதல்ல. இதேபோல் சூயஸ் நிறுவனத்தை பற்றி பேசினாலே கைது என்பதையும் ஏற்கமுடியாது. சூயஸ் நிறுவனம் குறித்து கருத்து சொல்லக் கூடாது என்ற நடவடிக்கையினை கோவை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடிநீர் விநியோ கத்தை சூயஸ் நிறுவனத்திடம் இருந்து கோவை மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும். இல்லை யேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு அரசை பணியவைப்போம் என எச்சரித்தார்.
இதேபோல், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் கூறுகையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் உள்ளாட்சித்துறை அமைச்சரின் அத்துமீறலாக செங்குளத்தை டன் கணக்கில் மண் கொட்டி குளத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடக்கிறது. இதனை கண்டித்து முற்றுகை போராட்டமானது நடத்தப்படுகிறது. ஆகவே செங்குளத்தை மீட்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். சித்திரைச் சாவடி அணையில் இருந்து கோவை குளங்களுக்கு தண்ணீர் வரும் பாதைகள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது. அதை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.