தரங்கம்பாடி ஆக 10- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளின் சத்துணவு மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனியன்று செம்பனார்கோவிலில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.,பவுன்ராஜ், 142 மையங்களுக்கு பாத்திரங்கள், ஹைஜினிக் கிட், கிரைண்டர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி உரையாற்றினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்த்தி நன்றி கூறினார்.