tamilnadu

img

அலைகளின் சீற்றத்தால் கரை அரிப்பு: வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது

புதுச்சேரி,டிச.9- புதுவையில் கடலோர கிராமங்களிலுள்ள வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக மாறியது. இதனால் புதுவை கனகசெட்டிகுளம் முதல் முல்லோடை வரைக்கும் கடல்  கொந்தளிப்புடன் 10 மீட்டர் உயரத் திற்கு அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. காற்றின் வேகமும் அதிகரித்ததால் கடற்கரை ஓரமாக உள்ள காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி மீனவ கிராமங்க ளின் வீடுகளுக்குள் கடல்நீர்  புகுந்ததுடன், கடல் அரிப்பால்  வீடுகளும் இடிந்து சேத மடைந்தது. இந்த பகுதியில் 500 குடும்பங் களை சேர்ந்த 2000க்கும் மேற் பட்டோர் வசித்து வருகிறார்கள்.  அதிலும் பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படக்கூடிய பகுதியாகும். இதனால், தூண்டில் வளைவு அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் தற்காலிகமாக கற்களை கொட்டி கடல் அரிப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும் என வும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால்,எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மறியல்

இந்த நிலையில், கடற்கரை ஓரங்களில் உள்ள வீடுகளை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டும் மழையிலும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தக வல் அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த அதிகாரிகள் மறியலில்  ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

முதல்வர் ஆய்வு

இதனையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட வைத்திகுப்பம், சோலைநகர், பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு ஆகிய மீனவ கிராமங்களுக்கு சென்ற முதல்வர்  ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினர்.