மதுரை, மே 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.வரதராசன் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் கரூரில் காலமானார். அவ ரது மறைவிற்கு தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதா தள பொதுச் செயலாளர் க.ஜான் மோசஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். தமது இரங்கல் செய்தியில், கே.வரத ராசன் ஒரு களப்பபோராளி, அவசர நிலை காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். எல்லோரிடத்திலும் இனிது பழகக்கூடியவர். பொதுவுடைமை கொள்கையில் நிலைத்து நின்றவர். அவரது மறைவு தேசியப் பற்றாளர்களுக்கு பேரிழப்பாகும். அவர் விட்டுச்சென்ற ஜனநாயக கொள்கைகளை காத்திட தொடர்ந்து முயல்வோம். கே.வரத ராசனின் புகழ் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.