கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட முடிவு
திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மதுரை, ஜூன் 1 - திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம் ஞாயிறன்று மதுரையில் அக்கட்சி யின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டா லின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் 27 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு முழுவதும் 102 இடங்களில் கலைஞரின் சாதனைகளைப் போற்றும் நிகழ்ச்சி கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 60 ஆண்டுகால அரசியல் பயணத்தில் தொடர் வெற்றி பெற்று வரும் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தி யாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திமுக அரசின் சாதனைகள் சிறப்பிக்கப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் பாராட்டப்பட்டன. உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் ஆகி யோரின் வாழ்வில் புதிய விடியல் தந்த திமுக அரசின் சாதனைகளைப் பரப்புவதற்கான தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணிக்கு தொடர்ந்து துணை நிற்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய அரசுக்கு எதிராக பல கண்டனத் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடு களை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும் என கோரப்பட்டது. தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்கும், இந்தித் திணிப்புக்கும், கீழடி ஆய்வை மறுப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக் கணிப்பதற்கும், சிறுபான்மையினர் உரிமை களைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்தத்திற்கும், விசாரணை அமைப்புகளின் தவறான பயன் பாட்டிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாநில உரிமைகள் தொடர்பாக, மீனவர்கள் நலனுக்காக கச்சத்தீவை மீட்டிடவும், சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாக நடத்திடவும் கோரப் பட்டது. மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. ஆளுநரின் அதிகார வரம்பை வரை யறுத்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி “வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடித்து” திமுக ஆட்சி தொடர களப் பணி தொடங்குவதற்கான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழினத்திற்கு பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், எங்கும் தமிழ்ப் பெயர்கள் சூட்டுவதற்கான தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது.